நியூயார்க் : பெண்கள் பாதுகாப்பில் பிறநாடுகளை விட இந்தியா மோசமானது அல்ல என காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர் தெரிவித்தார்.
பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டது. இந்நிலையில் இதுகுறித்து நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் சசி தரூர் பேசியதாவது:
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட வேண்டும். அதே சமயம் பெண்கள் பாதுகாப்பில் உலகின் மோசமான நாடு இந்தியா என்பதை ஜீரணிக்க முடியவில்லை. பெண்களுக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க சுதந்திரம் கிடைக்கிறது.
ஆப்கன், சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கருத்துக்கணிப்பை ஏற்றுக் கொள்கிறோமா, இல்லையா என்பது முக்கியமில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட வேண்டும். அதே சமயம் பெண்கள் பாதுகாப்பில் உலகின் மோசமான நாடு இந்தியா என்பதை ஜீரணிக்க முடியவில்லை. பெண்களுக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க சுதந்திரம் கிடைக்கிறது.
ஆப்கன், சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கருத்துக்கணிப்பை ஏற்றுக் கொள்கிறோமா, இல்லையா என்பது முக்கியமில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Post a Comment
Thank you