என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 21-ஆவது புத்தகக் கண்காட்சி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இன்று தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.



♈🌙புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வெளியிட உள்ளார்.

♈🌙புள்ளியியல் துறைக்கு இவர் ஆற்றிய பணிகளை நினைவு கூரும் விதமாக, இன்று கூகுள் தனது தேடல் பக்கத்தில் கூகுள் டூடுலாக பிசி.மஹலாநோபிஸின் ஆய்வுகளின் சாராம்சத்தை வைத்து பெருமை சேர்த்திருக்கிறது.

♈🌙அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ் விழா நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை, மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க பேரவை சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது. அமெரிக்காவில் 31-வது தமிழ் விழா நடைபெறவுள்ளது தொடர்பாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

♈🌙தமிழக காவல்துறை சார்பில் இன்று  மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த முகாம்களை சென்னையில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Image result for என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 21-ஆவது புத்தகக் கண்காட்சி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இன்று தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்

Comments